"சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் விடுதலைப் புலிகள்
சென்னை:
விடுதலைப் புலிகள் உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று புரட்சித் தலைவர் அதிமுக தலைவர்கள்கூறியுள்ளனர்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.டி.சோமசுந்தரம், இணைச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருபவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள்.அவர்கள் தீவிரவாதிகள் அல்ல.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி வைத்துள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க தமிழ் தேசியவாத இயக்கத் தலைவரும் விடுதலைப் புலிகள்ஆதரவாளருமான பழ. நெடுமாறனை தமிழக அரசு அனுப்பியுள்ளது சரியான முடிவு.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் சூழ்நிலை இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அதிமுக கட்சி தனியாக நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றனர் அவர்கள்.
யு.என்.ஐ.