மூதாட்டியைக் கொன்று நகை திருடியவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியைக் கொன்று காது தோட்டைத்திருடிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றி போலீஸார் கூறியதாவது:
தமிழகத்தில் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்வீரம்மாள் (70). இவர் அருகில் உள்ள காட்டில் சனிக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள், வீரம்மாளைக் கொன்று அவர் அணிந்திருந்தகாது தோட்டை திருடிச் சென்றுவிட்டனர்.
வீரம்மாளைக் காணவில்லை என்று அவரது உறவினர் தேடியபோது காட்டுப்பகுதியில்அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீரம்மாளைக் கொன்ற 4பேரையும் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications