For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார் மோதி பெண் பலி: விமானப்படை அதிகாரி மனைவி கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மாருதிக் கார் மோதி பெண் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். காரைத் தாறுமாறாக ஓட்டிய தாக விமானப் படை அதிகாரியின் மனைவியைப் போலீசார் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவர் திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில்பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதா (38). இவர் தனது மகள் ஆர்த்தியுடன் ரேஸ் கோர்சில்உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.

பின்னர் மாலையில் வீடு திரும்ப இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போதுஅவர்களுக்குப் பின்னால் தாறுமாறாக வந்த மாருதிக் கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.

மேலும், அந்த வழியாக நடந்து வந்த முன்று மாணவிகள் மீதும் மோதியது. இந்த விபத்தில் ராதாபலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தார்.

மேலும், இதில் காயமடைந்த ன்று மாணவிகளும் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காரைத் தாறுமாறாக ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக கோவை ரெட்பீல்டில் பணியாற்றி வரும்விமானப் படை அதிகாரியின் மனைவி கருணா (38) போலீசில் சரணடைந்தார்.

இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X