பூடானிலிருந்து அருணசால பிரதேசத்திற்கு இடம் பெயரும் தீவிரவாதிகள்
குவஹாத்தி:
உல்ஃபா தீவிரவாதிகள் தங்கள் தலைமையகத்தை பூடானிலிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு மாற்றி வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்தீவிரவாதிகளின் தலைமையகம் பூடானில் உள்ளது.
உல்ஃபா தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அஸ்ஸாம் மாநில போலீஸாரும் மற்ற கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த போலீஸாரும்தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், பூடானுக்கும் இந்திய போலீஸார் சென்று உல்ஃபா தீவிரவாதிகளைக் கைது செய்தனர்.
இதையடுத்து தங்களது தலைமையகத்தை அருணாசலப் பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் மாற்றிவருவதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் போலீஸார் அஸ்ஸாமிய மொழியில் உல்ஃபா தீவிரவாதிகளின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டனர். அப்போதுதான் அவர்கள் தங்களது தலைமையகத்தை பூடானிலிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு மாற்றிவருவதாகத் தெரியவந்தது.
அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அவர்கள் தலைமையத்தை படிப்படியாக அருணாசலப் பிரதேசத்துக்கு மாற்றி வருகின்றனர் என்று அஸ்ஸாம் மாநில மத்தியமேற்கு பிராந்திய போலீஸ் டிஐஜி திலீப் போரா தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications