For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போனஸ் போதாது: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று 19-ம் தேதி முதல் போராட்டம் நடத்தமின்வாரிய ஊழியர் மத்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு இவ்வாண்டு 20 சதவீதபோனஸ் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடுவீராச்சாமி சென்னையில் செவ்வாய்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

போனஸ் வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தினோம். அதில்எடுத்த முடிவுப்படி மின்வாரியத்தில் பணி புரியும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு8.33 சதவீத போனசும், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் ஆக மொத்தம் 20சதவீதம் போனஸ் வழங்குவது என்று முடிவெடிக்கப்பட்டது.

மின்வாரிய விநியோகப் பிரிவில் பணி புரியும் 10 ஆயிரம் ஒப்பந்தத்தொழிலாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.300 கருணைத் தொகையாகவழங்கப்பட்டது. அதை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றுதொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அது முடியாது. எனவே ரூ.400 ஆகஉயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தலா ரூ.925 வழங்குவது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பு மூலம் மின் வாரியத்துக்கு ரூ.55 கோடிகூடுதலாக செலவாகும். மாநிலம் முழுவதும் வருகிற 20ம் தேதி போனஸ்வழங்கப்பட்டு விடும் என்றார் அமைச்சர்.

போராட்ட அறிவிப்பு:

தமிழக அரசு அறிவித்துள்ள 20 சதவீத போனசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 19-ம் தேதிபோராட்டம் நடத்தப் போவதாக மின் வாரிய ஊழியர் மத்திய கூட்டமைப்புஅறிவித்துள்ளது.

20 சதவீத போனஸ் என்பது மிகவும் குறைவு. கடந்த ஆண்டை போலவே இந்தஆண்டும் ஊழியர்களை ஏமாற்ற அரசு நினைக்கிறது என்று அந்த சங்கம் குறைகூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X