அதிகாரம் கேட்கிறார்கள் பஞ்சாயத்து தலைவிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரம் தரப்பட வேண்டும்என்று சென்னையில் நடந்த பஞ்சாயத்து தலைவிகள் மாநாட்டில்வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 3,459 பஞ்சாயத்து தலைவிகளின்சார்பில் சென்னையில் மாநாடு புதன்கிழமை மாநாடு நடத்தப்பட்டது.
பஞ்சாயத்துத் தலைவிகளின் மாவட்ட பிரதிநிதிகள் என்ற முறையில்250-க்கும் மேற்பட்டவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.மாநாட்டிற்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர்மோகினி கிரி தலைமை தாங்கினார்.
தலைமை விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிவி.ஆர்.கிருஷ்ணய்யர் கலந்து கொண்டார். மாநாட்டைமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் வசந்திதேவி தொடங்கி வைத்தார்.
பஞ்சாயத்துக்களுக்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் நிதி பங்கீடுஉள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications