கோவாவில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி - பதவி விலக முதல்வர் மறுப்பு
பனாஜி:
கோவாவில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் அம் மாநில பாரதீய ஜனதா கட்சிமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா தலைமையிலான 11 மாத கூட்டணி ஆட்சி தற்போதுஆட்டம் கண்டுள்ளது.
கோவா மக்கள் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் சேர்ந்து கூட்டணிஆட்சியை நடத்தி வந்தன. இந் நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3பாஜக அமைச்சர்கள் திடீரென்று சனிக்கிழமை தங்களது பதவியை ராஜினாமாசெய்தனர்.
அதே நேரத்தில் கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியில் மேலும் பிளவுஏற்பட்டது. இதனால், கோவா அரசியயலில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டதை அடுத்து 40 பேர் கொண்ட கோவாசட்டப்பேரவையில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. தற்போது அக் கட்சிக்கு 18 பேர்உள்ளனர்.
இதையடுத்து கோவாவில் பிற கட்சிகள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க பாரதீயஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
அமைச்சரவையிலிருந்து விலகிய பாஜகவினர், தாங்கள் பிற கட்சிகளுடன் சேர்ந்துஆட்சி அமைக்க அனுமதிக்கும்படி கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
கட்சித் தலைமையும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படிஅவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டது. இதையடுத்து அடுத்தகட்ட முயற்சிகளில்அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் முதல்வர் ரவி ராயக்உள்பட 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேர்ந்தனர்.
தற்போது கோவா சட்டப்பேரவை பாஜக தலைவராக மனோகர் பர்ரிகார் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைந்தால் அவர் முதல்வராகப் பதவியேற்பார்என்று கூறப்படுகிறது.
ஆட்சி அமைப்பது குறித்து மற்ற கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்திவருகிறார். எந்த நேரத்தில் ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் மொகம்மதுபஸலிடமிருந்து அழைப்பு வரும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார்.
அதற்கு முன்னதாக பிரான்சிஸ்கோ சர்டினா அரசுக்கு அளித்து வரும் ஆதரவைவிலக்கிக் கொள்வதாக பாஜக அறிவிக்கும்.
இந் நிலையில், முதல்வர் பதிவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றுமுதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.