கேரள விஷச் சாராய சாவு: கணவருடன் பெண் சாராய வியாபாரி கைது

Subscribe to Oneindia Tamil

குருவாயூர்:

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானசம்பவத்துக்குக் காரணமான சாராய வியாபாரிகள் ஹெய்ருன்னிசாவும் அவரது கணவர்ராஜனும் கைது செய்யப்பட்டனர்.

கொல்லம் மாவட்டத்தில் இரு பகுதிகளில் ஒரே சமயத்தில் இந்த விஷச் சாராயத்திற்கு30 பேர் பலியானார்கள். இது தொடர்பாக சாராய வியாபாரி ஹெய்ருன்னிசாவையும்அவரது கணவரையும் போலீஸார் தேடி வந்தனர்.

தங்களிடம் சாராயம் வாங்கிக் குடித்தவர்கள் பலியானதை அடுத்து பயந்துபோனஹெய்ருன்னிசாவும், அவரது கணவர் ராஜனும் தலைமறைவாகிவிட்டனர்.அவர்களைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

இந் நிலையில், குருவாயூரில் உள்ள கிருஷ்ண கோயில் அருகே உள்ள லாட்ஜில்ஹெய்ருன்னிசாவும், ராஜனும் தங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று செவ்வாய்க்கிழமை காலை அவர்களைக்கைது செய்தனர்.

கொல்லம் மாவட்டத்திலிருந்து தப்பி திருச்சூர் மாவட்டம் மத்திலக்கத்தில் உள்ளஉறவினர் வீட்டுக்கு இருவரும் ஓடி வந்தனர். ஆனால், விஷச் சாராய பலி சம்பவம்நாடு முழுவதும் பரவியதை அடுத்து இருவருக்கும் அடைக்கலம் கொடுக்க உறவினர்மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்த அங்கிருந்து குருவாயூருக்கு வந்து லாட்ஜில் இருவரும் தங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து மாஹே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.அவர்களும் அடைக்கலம் தர மறுக்கவே மீண்டும் குருவாயூர் வந்து தங்கிய போதுஇருவரும் போலீஸாரிடம் சிக்கினர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+