6 வயது சிறுமியைக் கற்பழித்த 28 வயது இளைஞர்
கோயம்பத்தூர்:
கோவையில், 6 வயது சிறுமியைக் கற்பழித்த திருமணமான 28 வயது இளைஞரைபோலீஸார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்தவர் மணி (28). இவருக்குத் திருமணமாகி விட்டது. இவரதுமனைவி பிரசவத்திற்காக பெற்றோர் வீடு உள்ள பொள்ளாச்சிக்குச் சென்றிருந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மணி வீட்டுக்கு அருகேயிருந்த மதுக் கடைக்குச் சென்று மதுஅருந்தி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் 6 வயது சிறுமிதனியாக வருவதைப் பார்த்தார்.
சிறுமியைப் பார்த்த அவர், ஆசையாகப் பேசி வீட்டுக்குள் கூட்டிச் சென்றுள்ளார்.பின்னர் அச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அச்சிறுமி தனதுபெற்றோரிடம் கூறியுள்ளாள்.
சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து மணி கைதுசெய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications