தமிழுக்காக கருணாநிதியை பாராட்டுங்கள் ..வைகோ
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.
மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மதிமுக கட்சித் தொண்டர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்பவர்கள் தண்டனை பெற வேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றத் தண்டனையை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளாமல் மக்களை திசை திருப்புகிறார்.
கடந்த வாரம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதியை, ஜெயலலிதா தாறுமாறாகப் பேசியுள்ளார். இது மிகவும்கண்டனத்துக்குரியது.
திமுக விலிருந்து பிரிந்து மதிமுக உருவானபோதுகூட தமிழுக்குச் செய்த தொண்டுகளுக்காக முதல்வரைப் பாராட்டியுள்ளேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications