இலங்கைத் தமிழருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை:
ஹெராயின் போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற, இலற்கை குடியுரிமைபெற்றவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்தவர் அந்தோணி பெனடிக்ட். 1997-ம் ஆண்டு ஜுன் மாதம் 10-ம்தேதி அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை செல்லும் ஏர் லங்காவிமானத்தில் அந்தோணி ஏற முயன்றார். அப்போது, அவரது பையை விமானநிலை.ய அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் ரூ. 3.08 கோடி மதிப்புள்ளஹெராயின் என்ற போதைப் பொருள் இருந்தது.
இதையடுத்து அந்தோணி கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப் பொருள்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. சிறப்பு நீதிபதி தணிகாசலம்விசாரணை நடத்தி, அந்தோணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தார்.மேலும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார்.
அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனைஅனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தீர்ப்பளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications