ஆந்திராவில் 7 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாரங்கல் (ஆந்திரா):
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் 7 பெண்நக்சலைட்டுகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
தடை செய்யப்பட்ட மக்கள் போர்க் குழு என்ற நக்சலைட் பிரிவைச் சேர்ந்தவர்கள்இவர்கள். காசிம்பள்ளி வனப் பகுதியில், போலீஸாருக்கும், நக்சலைட்டுகளுக்கும்இடையே நடந்த சண்டையின்போது இந்த ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.
காசிம்பள்ளி வனப் பகுதியில் நக்சலைட்டுகள் ஒளிந்திருப்பதாக போலீஸாருக்குத் தகவ்வந்தது. இதையடுத்து போலீஸ் குழு அங்கு விரைந்தது. போலீஸாரைப் பார்த்ததும்,அங்கிருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். போலீஸார்திருப்பிச் சுட்டனர்.
இவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படடன. தொடர்ந்து அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications