வீட்டைக் காலி செய்ய பாண்டி. முதல்வருக்கு நோட்டீஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் வசித்துவரும் வீட்டை காலி செய்யுமாறு, பாண்டிச்சேரி பாட்டாளிமக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாண்டிச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர்ராஜசேகரன். இவர் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் வசித்து வரும் செல்வா மேன்சனைஉடனடியாக காலி செய்யுமாறு கூறி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராஜசேகரன், தான் அனுப்பியுள்ள நோட்டீசில் சண்முகம் சட்டத்திற்கு புறம்பாக அந்தவீட்டில் குடியிருப்பதால், அந்த வீட்டை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் எனக்கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பாண்டிச்சேரி துணை நிலைஆளுனரின் அனுமதியையும் கோரியிருக்கிறார்.
இந்த வீடு காலஞ்சென்ற பத்மினி சந்திரசேகரன் என்பவருக்குச் சொந்தமானது. அவர் இந்தவீட்டை 1972-ம் பாண்டிச்சேரி மக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவமனைகட்டுவதற்காக இலவசமாக வழங்கினார். அதில் சண்முகம் குடியிருப்பது தவறானது எனராஜசேகரன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.