போலீஸ் பிடியிலிருந்து 3 கைதிகள் தப்பினர்
தர்மபுரி:
தர்மபுரியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 கைதிகள் போலீசாரிடமிருந்துதப்பி ஓடி விட்டனர்.
தர்மபுரி அருகே உள்ள மாராண்டஹள்ளியில் இரு கோஷ்டிகளிடையே தகராறு ஏற்பட்டது.இந்த கோஷ்டி தகராறு தொடர்பாக ஒரு கோஷ்டியைச் சேர்ந்த சங்கர், சீனிவாசன்,கிருஷ்ணன் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு வழக்குப் பதிவு செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச்செல்லத் தயாராயினர்.
மூவரின் பாதுகாப்பிற்கு இரண்டு போலீஸ்காரர்களை இன்ஸ்பெக்டர் அனுப்பிவைத்துள்ளார். போலிஸ் ஸ்டேஷன், லாக்கப்பிலிருந்து கைதிகளை வெளியே கொண்டுவந்தனர்.
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மூவரும், போலீஸ் ஸ்டேஷனை விட்டுவெளியே வந்தவுடன் ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடும் கைதிகளைப் பார்த்துபோலீஸ்காரர்கள் திகைத்து நின்றனர். துரத்திப் பார்த்தனர். பிடிக்க முடியவில்லை.
போலீஸ் ஸ்டேஷனிலிருந்தே, போலீஸ் கண் முன்பாகவே, தப்பிய ான 3 கில்லாடிகைதிகளையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கைதிகள் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார் இன்ஸ்பெக்டர்ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications