காங்கிரஸ் முதல்வர்களின் மகாசங்கமம் .. தொடங்கி வைக்கிறார் சோனியா
அமினி (லட்சத்தீவுகள்):
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் 7 மாநிலங்களின் முதல்வர்களின் 3 நாள்மாநாடான மகாசங்கமம் லட்சத்தீவுகளில் உள்ள அமினி என்ற இடத்தில்வியாழக்கிழமை தொடங்குகிறது.
கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த மகா சங்கமத்தைத் தொடங்கி வைக்கிறார்.மாறிவரும் தேசிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிக்கு எப்படி புத்துயிர் ஊட்டுவதுகுறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
சோனியா காந்தி, மாநில முதல்வர்கள் தவிர, கட்சியின் பிற முக்கிய தலைவர்களும்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள, காங்கிரஸ் ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரா), திக் விஜய்சிங் (மத்தியப் பிரதேசம்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), எஸ்.எம். கிருஷ்ணா(கர்நாடகா), எஸ்.சி. ஜமீர் (நாகாலாந்து), முகுத் மித்தி (அருணாசலப் பிரதேசம்), ஷீலாதீட்சித் (டெல்லி), பி. சண்முகம் (பாண்டிச்சேரி) ஆகியோர் ஏற்கெனவே சம்மதம்தெரிவித்துள்ளனர்.
மக்களவை துணை சபாநாயகரும், லட்சத்தீவுகள் தொகுதி உறுப்பினருமான பி.எம்.சய்யீதும் இதில் கலந்து கொள்கிறார்.
யு.என்.ஐ.