மக்கள் விரும்பினால் மீண்டும் முதல்வராவேன் .. கருணாநிதி
தூத்துக்குடி:
தமிழக முதல்வர் பதவியை நீங்கள் விரும்பித்தந்தால் அதை ஏற்கத் தயாராக உள்ளேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் வ.உ.சி.கல்லூரியில் இந்திய வர்த்தக சங்க பவள விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இங்கு பேசிய பலர் நான் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று கேட்கிறார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் நீங்கள் திமுக வுக்குஓட்டளித்தால் நான் முதல்வராகத் தயார்.
ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு வணிகர்களுக்கு உண்டு. எப்படி விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் குரல் கொடுக்கிறோமோஅதேபோல் வணிக சமுதாயத்துக்கும் குரல் கொடுக்க வேண்டும்.
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. 93-94 ம் ஆண்டில் 2.03 கோடி ரூபாய்க்கு மென்பொருள் ஏற்றுமதி இருந்தது.ஆனால் கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 890 கோடி ரூபாய்க்கு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளோம் என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications