டீசல் விலை உயர்வு .. லாரி டிரைவர்கள் போராட முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டீசல் விலையை குறைக்காவிட்டால் நவம்பர் 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று லாரி உரிமையார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சமீபத்தில் கடுமையாக உயர்த்தியுள்ளது.டீசல் விலை உயர்வால் லாரிகள், டிரக்கர்கள் போன்ற சரக்குகளை ஏற்றிச் செல்லும்வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே டீசல் விலை உயர்வைமத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்தென் பிராந்திய தலைவர் பொன்.தென்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வை வாபஸ் பெறவில்லை என்றால் நவம்பர் 3ம் தேதி முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் எங்கள் சங்கம் குதிக்கும். லாரிகள்,டிரக்கர்கள், வேன்கள் போன்றவை ஓடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications