For Daily Alerts
Just In
ஆபரேஷனுக்குத் தயாராகிறார் வாஜ்பாய்!
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய், திங்கள்கிழமை டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவவிஞ்ஞானக் கழக மருத்துவமனையில் மூட்டு ஆபரேஷனுக்கு முந்தையபரிசோதனைகளை மேற்கொண்டார்.
மும்பையிலுள்ள பிரீச்கண்டி மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு மூட்டு வலிக்கானஆபறேஷன் அக்டோபர் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக 8-ம் தேதி அவர்மும்பை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷனுக்குப் பிறகு நான்கு நாட்கள் வரை மருத்துவமனையிலேயே பிரதமர்தங்கியிருப்பார் என்று தெரிகிறது. அக்டோபர் 18-ம் தேதி அவர் டெல்லி திரும்புவார்என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே வாஜ்பாய் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.இருந்தும் கூட சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Story first published: Monday, October 2, 2000, 5:30 [IST]