For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வை கருணாநிதி ஆதரிப்பது ஏன்?- கேட்கிறார் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுகவும் போராட்டத்தில் இறங்குகிறது.

இக் கட்சி சார்பில் வருகிற 13ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சிபொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

ஏழை- எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் சமையல் வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இதை திமுக அரசும் நியாயப்படுத்துகிறது.

மத்திய அரசின் இந்த அநியாய விலை உயர்வை கண்டித்து மத்திய அரசில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி மந்திரி பதவியைராஜினாமா செய்துள்ளார். ஆனால், கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கருணாநிதி பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்திபேசி வருகிறார்.

மக்கள் நலனில் அக்கறை இன்றி பதவிச் சுகம் ஒன்றையே நினைத்துச் செயல்படும் கருணாநிதியின் மக்கள் விரோதப் போக்குஇதன் மூலம் தெளிவாகிறது.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 13ம் தேதி நடைபெறும். மதுரையில் காளிமுத்து,தேனியில் தினகரன், கரூரில் பி.எச்.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X