ஜெ.வுக்காக பஸ்சை உடைத்தவர்களுக்கு ஜாமீன்
சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைஎதிர்த்து பஸ்சை உடைத்ததாக கைது செய்யப்பட்ட 8 அ..தி.மு.க.வினருக்கு ஜாமீன்வழங்கப்பட்டது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா உட்பட 6 பேருக்கு 3 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதிதத்து தனிநீதிமன்ற நீதிபதி அன்பழகன் கடந்த மாதம் 9-ம் தேதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து மதுரை அருகே இருக்கும் மேலூரில் அரசு பஸ்சை உடைத்தாக 8அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் த்ங்களை விடுவிக்கக்கோரிமதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செயத் மனு தள்ளுபடிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா கதிரி இவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய்ரொக்கமும் இரு நபர் ஜாமீனிலும் விடும்படி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications