வாயுக் கசிவு .. தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை அருகே விஷவாயு தாக்கி 350 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகதொழிற்சாலை நிறுவனர் உட்பட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தொழிற்சாலை மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

கோவை அருகே உள்ள உடுமலைப்பேட்டை தாராபுரம் ரோட்டில் சோடியம் ஹைட்ரோகுளோரைடு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்தத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குளோரின் வாயு கசிவுஏற்பட்டது. இந்த வாயு கசிவில் 350 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம்போன்றவற்றால் பாதிப்படைந்தனர்.

இவர்கள் அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் ஹரி, மற்றும்மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பவ இடத்தை எம்.எல்.ஏ., செல்வராஜ், மற்றும் தாசில்தார் சென்றுபார்வையிட்டனர். தற்போது தொழிற்சாலையை சுத்தப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இந்த பணி முடிந்ததும், பாதுகாப்பை உறுதி செய்யும் பணிமேற்கொள்ளப்படும். அதுவரை தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதை நிறுத்திவைக்குமாறு தாசில்தார் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+