For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

லாஸ்ஏஞ்சல்ஸ்:

ஈராக் அதிபர் சதாம் உசேனை மையமாக வைத்து டாக்குமென்டரிப் படம் எடுத்தவருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜோல் சோலர். 32 வயதாகும் இவர் அங்கிள் சதாம் என்ற பெயரில் சுமார் 62 நிமிடங்கள் ஓடக்கூடியடாக்குமென்டரி படத்தை எடுத்துள்ளார். சதாம் உசேன் குறித்த படமாகும் இது. இந்தப் படம் ஈராக்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், சோலருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது வீட்டு தபால் பெட்டியில் மிரட்டல் கடிதம் போடப்பட்டிருந்தது. அதை எழுதியவர்பெயர் குறிப்பிப்படவில்லை. கடிதத்தில், கடவுள் கருணையால் நீ உயிர் பிழைக்க வேண்டுமானால் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. படச்சுருள்களை எரித்துவிட வேண்டும். அல்லது நீ கொலை செய்யப்படுவாய் என்று மிரட்டும் தொனியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோலர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு முழுவதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனக்கு பாதுகாவலர் தேவை. இந்த மிரட்டல்கடிதத்தால் என்ன விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறேன். ஈராக் நாட்டினர் அங்கிள் சதாம்டாக்குமென்ட்ரிப் படத்தினால் அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இது ஒரு கோபக்கார இளைஞனின் செயலா அல்லது இதற்குப்பின்னணியில் மிகப் பெரிய அமைப்புக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் மறைவிடம்தேடிப் போகலாம் என்று நினைக்கிறேன். மேலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இப்படம் எடுப்பதற்காக நான்ஈராக்கில் இருந்த போது, எனக்கு அங்கேயும் பல பிரச்சனைகள் இருந்தது என்றார்.

அங்கிள் சதாம் திரைப்படம் வான்கூவர் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. இப்படம் குறித்து அமெரிக்க தூதர் டேவிட் ஸ்கபர் கூறுகையில், மிகத்தைரியமாக எடுக்கப்பட்ட, துணிச்சலான படம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X