இவர்கள் கடவுளின் குழந்தைகள் ...
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பிறந்து 3 நாட்களே ஆன இரண்டு குழந்தைகள் சேலத்தில் அனாதையாக்கப்பட்டன. அரசுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு இவை இரண்டும் கவனிக்கப்பட்டு வருகின்றன.
சேலத்தில் நவம்பர் 2-ம் தேதி இரண்டு குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டன. பிறந்து 3நாட்களே ஆன இந்த குழந்தைகளில் ஒன்று, மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைஅருகிலும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனை அருகிலும் கண்டெடுக்கப்பட்டன.
அரசு மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட குழந்தையை இரண்டு சிறுவர்கள்கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழந்தைகள் இரண்டும் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில்ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவர்களின் பராமரிப்பில் இவைகவனிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications