கர்நாடக டி.ஜி.பி.யை சந்தித்தார் அப்துல் கரீம்
மைசூர்:
மைசூர் சிறையில் உள்ள தமிழ்த் தடா கைதிகளை, நடிகர் ராஜ்குமாரைவிடுவிப்பதற்காக விடுதலை செய்யக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ள ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அப்துல் கரீம், கர்நாடக டி.ஜி.பி மற்றும்முன்னாள் அதிரடிப்படை தலைவர் சங்கர் பித்ரி ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என்று அப்துல் கரீம் கூறினாலும், ஏதாவதுவிஷயம் இருக்கும் என்று பேசப்படுகிறது.
டெல்லியிலிருந்து பெங்களூர் வந்த அப்துல் கரீம் நேராக டி.ஜி.பி. தினகர் மற்றும் சங்கர்பித்ரியைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், தினகர் டி.ஜி.பியாகபதவியேற்றவுடனேயே அவருக்கு வாழ்த்துக் கூற விரும்பினேன். ஆனால்இப்போதுதான் நேரம் கிடைத்தது.
தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கு குறித்து இருவருடனும்விவாதித்தேன். இந்த வழக்குகளுக்காக, கன்னடத்தில் உள்ள அனைத்துஆவணங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். இதற்காக ரூ. 25, 000வரை செலவழித்துள்ளேன் என்றார்.
நடிகர் ராஜ்குமார் வீரப்பனால், கடத்தப்பட்டு 98 நாட்கள் ஆகி விட்டதுகுறிப்பிடத்தக்கது. ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், தமிழ்த் தடா கைதிகளைவிடுவித்தே ஆக வேண்டும் என்று வீரப்பன் பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.