எப்போது பறக்கும் இலகு ரக போர் விமானம்
டெல்லி:
இந்தியாவின் முதலாவது இலகு ரக போர் விமானம் இந்த ஆண்டின் இறுதியில் சோதனை ரீதியில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலகு ரக போர் விமானத் தயாரிப்புப் பணியில் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிப்புப் பணியைமுடித்து விட்டால், அடுத்த வருடம் பெங்களூரில் நடக்கும் போர்விமானக் கண்காட்சியில் சோதனை ரீதியாக பறக்க விட பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள்முடிவு செய்துள்ளனர்.
1983 ம் ஆண்டு இலக ரக விமானத் தயாரிப்புப் பணி துவங்கியது. ஆனால், 1998 ம் வருடம் இந்தியா ராஜஸ்தானில் அணுகுண்டு வெடித்து சோதனைநடத்தியதையடுத்து சர்வதேச பொருளாதாரத் தடை அமல்படுத்தப்பட்டது. இதனால் விமானத் தயாரிப்புப் பணி தாமதமானது.
இலகு ரக விமானத் தயாரிப்புத் திட்டத்திற்காக இதுவரை ரூ 20 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 1996 ம் ஆண்டு விமானத்தின் முதல் மாதிரிவெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இதுகுறித்து பெங்ளூர் விமானவியல் மேம்பாட்டுக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், இலகு ரக விமானத்தின்அனைத்து பாகங்களும் தயாரிக்கப்பட்டு விட்டது. விரைவில் இந்த விமானம் பறக்க விடப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications