சிறை நிரப்பப் போகிறார்கள் விவசாயிகள்
சென்னை:
கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் மற்றும்உழைப்பாளர் கட்சி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் முதல்வர் கருணாநிதியின் வீடு முன் தர்ணா நடத்தவும், விழுப்புரத்திலிருந்து, சென்னை வரைஊர்வலங்கள் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியின் போது, கட்டிடத் தொழிலாளர்களின் நலனிற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது.அந்தத் திட்டங்கள் இன்னும் பெயரளவிலேயே உள்ளன. அவற்றை செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும்.
திமுக அரசு, கட்டிடத் தொழிலாளர்களுக்கு வர வேண்டிய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், ஊழியர் காப்பீட்டுநிதி ஆகியவற்றைத் தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதைக் கண்டித்தும் சிறை நிரப்பும் போராட்டம்நடத்தவுள்ளோம் என்று இந்தக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications