மீண்டது இன்சாட்-2பி
பெங்களூர்:
பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த, இன்சாட்-2பி செயற்கைக்கோள் மீண்டும் இந்திய விண்வெளிக் கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.
சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகியதால், பூமியுடனான அதன் தகவல் தொடர்புதுண்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் செயற்கைக் கோள் அதன் பாதைக்கு வந்துவிட்டது.
பூமியிலுள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் செயற்கைக் கோளிலிருந்துசிக்னல்கள் வரத் துவங்கி விட்டதாக, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில்அமைந்துள்ள மாஸ்டர் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செயற்கைக் கோள் சிறப்பாக இயங்குவதாகவும், செயற்கைக் கோளின் அனைத்துசாதனங்களும் பழுதின்றி இருப்பதாகவும் ஹாசன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இன்சாட்-2பி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தஆண்டு ஜூலை மாதத்துடன் அதன் ஆயுள் காலம் முடிந்து விட்டது. இருப்பினும்தொடர்ந்து சிறப்பாக இயங்கி வந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
செயற்கைக் கோளின் இரண்டு டிரான்ஸ்பான்டர்களில் ஒன்றை தூரதர்ஷன் பயன்படுத்திவருகிறது. இன்னொரு டிரான்ஸ்பான்டரை, வி.எஸ்.என்.எல். எடுத்துள்ளது. தற்போதுசெயற்கைக் கோள் சாதாரண நிலைக்கு வந்து விட்டதால், அனைத்து சேவைகளும்வழக்கம் போல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications