For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஞ்சோலை பிரச்னை.. கையில் எடுக்கிறது பு.தமிழகம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை விரைவில் தீர்க்கக் கோரி புதிய தமிழகம் கட்சி வரும் டிசம்பர் 6 ம் தேதிபோராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்று கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாஞ்சோலை எஸ்டேட்டில் தலித் இன மக்கள் பலர் பல்லாண்டு காலமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு பல பிரச்சனைகளை அவர்கள் சந்தித்துவருகிறார்கள்.

எஸ்டேட் நிர்வாகம் அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும், இன்னமும் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியது. இதைக் கண்டித்து நவம்பர் மாதம் புதிய தமிழகம் கட்சிஅனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையத்தின் முன் தர்ணா நடத்தும்.

தாழ்த்தப் பட்டவர்களுக்காக தமிழக அரசுப்பணியில் 6000 காலியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கு தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து புதிய தமிழகம் கட்சி தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் என்றார் கிருஷ்ணசாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X