For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடனடி உணவுத் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் மைசூர் உணவுக் கழகம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு ஆராய்ச்சிக் கழகம் போஷாக்குடன் தனது பொன் விழா ஆண்டைக் கொண்டாடுகிறது.

கடந்த 50 வருடங்களாக இன்ஸ்டன்ட் உணவு தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது இந்தக் கழகம். கழக இயக்குநர் பிரகாஷ் இதுகுறித்துக் கூறுகையில்,50 வருடங்களுக்கு முன்பு இந்திய கிராமங்களில் வீங்கிய வயிறுடன் காணப்படும் சிறுவர்கள் அதிகம். ஊட்டச் சத்து இல்லாததால்தான் இப்படிப்பட்டகாட்சிகளை இந்தியா காண நேர்ந்தது.

குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பால் பொருட்கள், பவுடர்கள் போன்றவை எருமைப் பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் கொழுப்புஅதிகம். ஆனால் நாங்கள் அதே எருமைப் பாலில், குறைந்த கொழுப்பு சத்தியுடன் கூடிய பால் பொருட்களைத் தயாரிக்கிறோம்.

பாரம்பரிய முறையிலான உணவு தயாரிப்பில், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயாரித்து, இந்தியா முழுவதிலும் உள்ளலட்சக்கணக்கான சிறுதொழிலதிபர்களுக்கு உதவுவதே எங்களது முக்கிய நோக்கம்.

குஜராத் மாநிலத்தில், தோசை தயாரிக்கும் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தினோம். இதற்காக தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் அரிசி மற்றும் இதரபொருட்களைப் போட்டால் போதும். மறுபக்கம் தோசைகள் வந்து கொட்டும்.

இதே போல் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, வடை மற்றும் குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற டோக்லா வகை உணவுகளைஇன்ஸ்டன்டாகத் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் வீணாவதைக் குறைப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். உதாரணமாகத் தென்னைமரத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள எதுவும் வீணாவதில்லை. இதே போல் மாமரத்திலிருந்து கிடைக்கும் அனைத்தையும் உபயோகிக்கநடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் பிரகாஷ்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X