காங். தலைவர் பதவிக்கு இளங்கோவன் போட்டியிடுவாரா?
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாநில காங்கிரஸ் தலைவர்பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. தற்போதுதமிழக காங்கிரஸ் நிர்வாகத்தில் தலித்கள் மற்றும் பிற சிறுபான்மைப் பிரிவினருக்குப்போதுமான பிரதிநிதித்துவம் தரவில்லை. விரைவில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம்அளிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கிறது.தேர்தலின்போதுதான் கூட்டணியில் மாற்றம் தேவையா என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும் கூடஅவரால் தேர்தலில் நிற்க முடியும். இந்த நிலையில் எதையுமே முடிவு செய்யக் கூடாது.பல வக்கீல்கள், ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியும் என்றே கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்கவும், சோனியா காந்தியை எதிர்க்கவும் சில சக்திகள்மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த சக்திகளின் சார்பில் தான்ஜிதேந்திரா பிரசாத் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜிதேந்திர பிரசாத்துக்கு காங்கிரஸார் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். அனைவரும்அவரது போட்டியை எதிர்க்கின்றனர் என்றார் இளங்கோவன்.
யு.என்.ஐ.