For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. திருந்த வேண்டும் என்கிறார் ஆற்காடு வீராசாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா தனது ஆணவத்தை விட்டுவிட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் கருணாநிதியை ஜெயிலில் அடைப்பேன் என்று ஜெயலலிதா பேசியதற்கு ஆட்சேபம் தெரிவித்து,தென்சென்னை திமுக சார்பில் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஆற்காடு வீராசாமி பேசியதாவது:

முதல்வர் கருணாநிதியை விமர்சித்தற்காக ஜெயலலிதா மீது ஒரு புறம் ஆத்திரம் இருந்தாலும், இதன் மூலம் அவர் அதிமுக தொண்டர்களிடையே எழுச்சியைஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனுத் தாக்கல் செய்தால் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காதீர்கள் என்று அரசு வக்கீலுக்குமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இல்லாவிடில் இந்நேரம் ஜெயலலிதாஜெயலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்.

ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் இரண்டு ஆண்டுகள், டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனைகிடைத்துள்ளது. 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஜெயலலிதாவுக்கு எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

லண்டனில் 248 கோடி ரூபாய்க்கு பிரமாண்டமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இதுபற்றி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா தவிர கேமரூன் தீவுகளிலும் 750 கோடிக்கு ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து இருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜெயலலிதா 2001 ம் ஆண்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியுமா? என்பதே சந்தேகம். அவர் தேர்தலில் நிற்கவே முடியாது. ஜெயலலிதா தன்ஆணவத்தைக் கைவிட்டுவிட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆற்காடு வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X