For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் புகார்: மீண்டும் பிரச்சனையில் பங்காரப்பா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ந்தது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா மீது சி.பி.ஐ. தாக்கல்செய்த குற்றப் பத்திரிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த பங்காரப்பா பெரும் ஊழல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.அரசு அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர்கள் வாங்கியதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருந்தார்.

இவர் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. விசாரணை நடத்தி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும்தாக்கல் செய்தது. ஆனால், இந்த குற்றப் பத்திரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை நீதிபதி தாமஸ் தலைமையிலான உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. நீதிபதி தாமஸ் கூறுகையில், பங்காரப்பா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்ட நிலையில் அதனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது தவறு. இதில் நீதிமன்றம் தனது அதிகார வரம்பைமீறி செயல்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்த காலத்தில் ரூ. 7.78 அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளார் பங்காரப்பா. இது தவறானமுறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களா இல்லையா என்பதை விசாரித்திருக்க வேண்டும் என்றார்.

பங்காரப்பாவின் ஆட்சி காலத்தில் ஊழல் புகார்கள் பெருகியதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தான் காவிரிப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. தன்னை அரசியல்ரீதியில் நிலை நிறுத்திக் கொள்ளகாவிரிப் பிரச்சனையை பங்காரப்பா பயன்படுத்தினார். இவரது ஆட்சியில் தான் லட்சக்கணக்கான தமிழர்கள்கர்நாடகத்தில் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X