லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: 3 வது இடத்தில் தமிழகம்
டெல்லி:
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதில் ஹைதராபாத் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது.
டெல்லியில் உள்ள மத்திய தகவல் கல்வி என்ற அமைப்பின் சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு முகாம்நடத்தப்பட்டது.
இதில் டெல்லி, பூனா, லக்னோ, ஹைதராபாத், சென்னை நகரங்களில் செயல்படும் அரசு அலுவலங்களில் லஞ்சம்பெறப்படுவது குறித்து 2 ஆயிரத்து 576பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் ஹைதராபாத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அதிக அளவு லஞ்சம் பெறப்படுவதாக 60 சதவிகிதம் பேர்கருத்து தெரிவித்துள்ளனர். பூனாவில் 58 சதவிகிதமும், சென்னையில் 38 சதவிகிதமும் அரசு ஊழியர்கள் லஞ்சம்வாங்குவதாக அந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் அதிகாரிகளை விட அரசியல்வாதிகள் அதிகம் லஞ்சம் பெறுவதாக 60 சதவிகித மக்கள்தெரிவித்துள்ளனர். சிறுதொழில் செய்பவர்களும், வியாபாரிகளும் தங்கள் பணிகள் நடைபெற அரசுஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
5 பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் 40 சதவிகிதம் பேர் தங்கள் சொந்த காரியங்கள் நிறைவேற அரசுஅதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கிறது என அந்த கருதத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.