கிரெட் கார்டு மோசடி: 3 இலங்கைத் தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டனில் வாங்கிய போலி கிரெடிட் கார்டை பயன்படுத்தி சென்னையில் உள்ள கடைகளில் லட்சக் கணக்கில்மோசடி செய்த 3 இலங்கை வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்யிைல் உள்ள பல பகுதிகளில் உள்ள ஷாப்பிங் சென்டர்களில் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திமோசடி செய்யப்படுவதாக கடைக்காரர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டு வந்தனர். மோசடி ஆசாமிகளை பிடிக்க 3 தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் போலி கிரெடிட் கார்டை கொடுத்து ஏமாற்றமுயன்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உஷாரான போலீஸ் படை அப்பகுதியை முற்றுகையிட்டு ஒரு கடைவிடாமல் விசாரணையில் இறங்கினர். சோதனையில் யாரும் சிக்கவில்லை.

பின்னர் போலீஸ் படை ரோந்து வந்த போது பனகல் பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த மூவர் போலீசைக்கண்டதும் ஓடத் துவங்கினர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள்மூவரும் இலங்கைத் தமிழர்கள். பெயர் மோகன் என்கிற இலக்கியன், கவுஸ் முகமது, ரஜினிகாந்த்.

மூவரையும் கைது செய்து விசாரித்த போது லண்டனில் 25 ஆயிரம் ரூபாய்க்கு போலி கிரெடிட் கார்டுகளைவாங்கியதாகவும், அதைப் பயன்படுத்தி சென்னை. திருச்சியில் பல கடைகளில் பல லட்சம் மதிப்புள்ளபொருட்களை வாங்கி மோசடி செய்ததாகவும் தெரிவித்தனர்

ஏற்கனவே கடந்த வாரத்தில் இதே போல் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்த இரண்டுஇலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+