For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் அநாதைகளின் புகலிடம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

அரசியல் அநாதைகளுக்கு எங்கள் கட்சிதான் புகலிடம் என்று புரட்சித் தலைவர் அ.தி.மு.க. தலைவர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன்ஆகியோர் தெரிவித்தனர்.

மதுரையில் அவர்கள் அளித்த பேட்டி:

நான் அ.தி.மு.க.அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஊழல்கள் நடந்தன என்பதால், அதில் எனக்கும் பங்கு உண்டு என கூற முடியாது.

சட்டசபைத் தேர்தலில் த.மா.கா.வுடன் கூட்டு உண்டா என்பதை இப்போது சொல்ல முடியாது. எந்த அணியுடன் தேர்தல் உறவு என்பதை தேர்தல் நேரத்தில்தீர்மானிப்போம்.

இப்போதைக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. அதே நிலை தி.மு.க.வுக்கும் பொருந்தும். இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தான் எதையும்திட்டவட்டமாக சொல்ல முடியும் என்றார் எஸ்.டி. சோம சுந்தரம்.

உடனிருந்த இக்கட்சியை சேர்ந்த துணைப் பொதுச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மகாமட்டமான தீர்ப்பை அளித்துள்ளது.

இது ஒரு அரசின் நிர்வாக மற்றும் சட்டத்துறையில் தலையிடுவதாகும். சட்டம் இயற்றுதல் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஒரு அரசின்கடமையாகும். அதில் தலையிடுவது ஜனநாயகத்திற்கு வைக்கும் வேட்டு.

எம்.ஜி.ஆரை நம்பி வந்தவர்களை அரசியல் ரீதியாக அநாதையாக்கியுள்ளார் ஜெயலலிதா. அவர்களுக்கு புகலிடமாக எங்கள் கட்சி உள்ளது. அந்தவகையில் எங்கள் கடமையை செய்து வருகிறோம். எனவே உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X