நார்வே தலையீடு தேவையில்லை
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனையில் நார்வே தலையிடக் கூடாது என்று ஜனதா விமுக்தி பெருமுனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சி நார்வே நாட்டு தூதர் ஜான் வெஸ்ட்பர்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற சர்வதேசக் கோட்பாட்டை மீறி நார்வே செயல்படுகிறது.
மேற்காசியப் பிரச்சனையில் நார்வே தலையிட்டது. அப்பிரச்சனையில் தோல்வி ஏற்பட்டது. இலங்கை இனப்பிரச்சனையில் நார்வே நாடு தலையிடக் கூடாது.நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் நார்வே தொடர்ந்து தலையிட்டால், எங்கள் கட்சியும், சிங்கள மக்களும் தலையிட்டு நடத்துவார்கள். இலங்கையைத் துண்டாட நாங்கள்ஒருபோதும் விடமாட்டோம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நார்வே தூதுக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என்று புத்த பிட்சுக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications