சென்னையில் பாரதி இசை விழா
சென்னை:
சென்னையில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் அடுத்த மாதம் 11-ம் தேதிபாரதி இசை விழா கொண்டாடப்படவுள்ளது.
விழாவை வானவில் பண்பாட்டு மையம் நடத்துகிறது. இந்த மையத்தின் நிறுவனர் ரவிஇதுகுறித்துக் கூறுகையில், ஆண்டுதோறும், பாரதி பிறந்த தின விழா அவரது நினைவுஇல்லத்தில் கொண்டாடி வருகிறோம். தற்போது 6-வது ஆண்டாக இந்த விழாவை, இசைவிழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
மொத்தம் 2 நாட்களுக்கு இசை விழா நடைபெறும். முதல் நாள் விழாவில் பாரதி விருதுவழங்கப்படுகிறது. கன்னியாக்குமரியில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலையைவடிவமைத்த சிற்பி, கணபதி ஸ்தபதிக்கு இந்த ஆண்டுக்கான பாரதி விருதுவழங்கப்படுகிறது.
பின்னர், பாரதி பாடல்கள் அடங்கிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். இதை நாரத கானசபைக் குழுவினர் வழங்குகின்றனர்.
2-வது நாள் நிழ்ச்சியில் பாரதி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாரதியின் பேரன்,ராஜ்குமார் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாடுகின்றனர். இந்த நிழ்ச்சி,குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசையுடன் துவங்கும்.
வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின், பாரதி வந்தார் என்ற வில்லுப்பாட்டுநிகழ்ச்சியும் அன்றே நடக்கிறது.
பின்னர், பாரதியின் பிறந்த நாள் கவிஞர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதில்ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை பாடுவர் என்றார் ரவி.












Click it and Unblock the Notifications