மாணவனை மணந்த ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

வடக்கன்குளம் (திருநெல்வேலி):

திருநெல்வேலியில் ஆசிரியையும், மாணவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வசித்து வரும் வேலுவின் மகள் செலீனா(27). இவர் தனியார் கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

அதே கல்லூரியில் சுந்தர் (21) என்பவர் பி.ஏ. படித்து வந்தார். போதிக்கும்ஆசிரியைக்கும், படிக்க வந்த மாணவருக்கும் காதல் வந்தது. காதலித்தனர். ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து வாழ இயலாது என்ற அளவிற்கு காதல் வலுவடைந்தது.

வழக்கம் போல பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வருத்தமடைந்த காதலர்கள்,கடந்த வாரம் வீட்டைத் துறந்து வெளியேறினர்.

இது குறித்து பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததும், காதல் ஜோடி காவல்நிலையத்தில், தஞ்சம் புகுந்தது. இருவரும் பிரிந்து வாழ முடியாது எனக் கூறியதால்போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து திருமணத்தை நடத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+