மாணவிகளிடம் சில்மிஷம் .. ஆசிரியர் "சஸ்பெண்ட்
நாமக்கல்:
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை ஒன்றியத்தில் ஆனங்கூர் உள்ளது. இங்குள்ளநடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் முத்துச்சாமி(48).
பள்ளிக்கு வரும் மாணவிகளிடம் இவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகத்தெரிகிறது. குறிப்பிட்ட சில மாணவிகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அங்குஅவர்களது உடலைத் தீண்டி அருவருக்கத்தக்க முறையில் நடந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர்.இதனை பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரியிடம் புகாராகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சிவசுப்ரமணியம், பள்ளிக்குச்சென்று நேரடியாக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும்,பொதுமக்களிடமும் அதிகாரி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துச்சாமியைசஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.