கருணாநிதியைக் குறை கூறுகிறார் ராமதாஸ்
திருச்சி:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதிஎன்னிடம் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ்குற்றம் சாட்டினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும், பெரும்பாலானதொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கும் அதிகாரிகளின் திறைமையற்றநிர்வாகம்தான் காரணம்.
தற்போதிருக்கும் தமிழக அரசு விவசாயிகளின் நலன்களைப் பற்றிகவலைப்படவில்லை, விவசாயிகளின் வாழக்கைத் தரம் கொஞ்சமும் மாறவில்லை.மாறாக அவர்களது கடன் சுமைதான் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கிறது.விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தரும் திட்டத்தைதமிழக அரசு கொண்டு வர வேண்டும். ஊதியத்தில் வீட்டு வாடகைப்படி பெறும்அதிகாரிகளுக்கு விவசாய நிலங்களில் வீடு கட்டித் தருவதற்கு பதிலாக வேறுஇடங்களில் வீடு கட்டித்தர வேண்டும்.
திருவண்ணாமலையில் உள்ள விதை நெல் பண்ணை மூடப்படும் நிலையில் உள்ளது,.இந்த நெல் பண்ணையை சீரமைக்க நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.
சந்தன கடத்தல் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்தும்அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்ணான்டஸ் சமீபத்தில் சென்னை வந்த போது என்னை அழைத்துப்பேசினார்.
கர்நாடக முதல்வர் எஸ்.எம், கிருஷ்ணாவும் இப்பிரச்சனை குறித்து என்னிடம்ஆலோசனை நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கும் கருணாநிதி.என்னிடம் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. கூட்டணிக் கட்சித்தலைவர் என்ற முறையில் கூட இதுபற்றி அவர் என்னிடம் விவாதிக்கவில்லை.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைகூட்டியிருக்கலாம். அனால், அதையும் கருணாநிதி செய்யவில்லை.
நடிகர் ராஜ்குமாரை உடனடியாக விடுதலை செய்யும்படி வீரப்பனுக்கு நான் கடிதம்எழுதியிருக்கிறேன். தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ள பாண்டிச்சேரி சுகுமாரனிடம்இந்த கடிதத்தை கொடுத்து அனுப்பியுள்ளேன் என்றார் ராமதாஸ்.