மது கடத்தலில் எம்.எல்.ஏ. அண்ணன் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

போலி மது கடத்தல் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ., சாமிநாதனின் அண்ணன் குப்புசாமியைப் போலீசார் கைது செய்தனர். இதனால் ஈரோடுமாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே போலீசார் புதன்கிழமை போலி மது கடத்தி வந்த வேனை கைப்பற்றினர். வேன் டிரைவர் பழனிச்சாமி, தப்பி ஓடும்போது கிணற்றில்தவறி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், போலி மது முத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பதுக்கி வைத்திருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின்அடிப்படையில், முத்தூர்- ஈரோடு ரோட்டில் உள்ள சாமியப்பா திருமண மண்டபத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 93 அட்டைப் பெட்டிகளில்மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த திருமண மண்டபத்தில் அரசு முத்திரையுடன் கூடிய (ஹோலோகிராம்) லேபிள்களையும் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் தொடர்ந்துநடத்திய விசாரணையில் ஈரோடு தி.மு.க தெற்கு மாவட்டச் செயலரும் வெள்ளகோயில் எம்.எல்.ஏ.,வுமான முத்தூர் சாமிநாதனின் அண்ணன் குப்புசாமிஎன்ற எம்.பி.கிருஷ்ணகுமார் செய்யப்பட்டார்.

முத்தூரில் உள்ள குப்புசாமி திருமண மண்டபம் இவருக்குச் சொந்தமானது என்றும், இவரது கடைக்கு போலி மது பாட்டில்கள் கோவைமாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த மண்டபத்தில் பதுக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+