வீரப்பன் கோரிக்கையை அரசு ஏற்றது?
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக தமிழக அரசு வீரப்பனின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அவை என்ன என்பது குறித்து பின்னர் தெரியவரும் என்று சிறையில் உள்ள தமிழ்த் தீவிரவாதிரேடியோ வெங்கடேசன் கூறியுள்ளார்.
குள்ளஞ்சாவடி காவல் நிலையத் தாக்குதல் மற்றும் வேலூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டுகைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசன், காவல் நீட்டிப்பிற்காக புதன்கிழமை சென்னை சிறப்புநீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
காவல் நீட்டிப்புக்குப் பின் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் கூறுவதுசரியான தகவலே. இதுகுறித்து விரைவில் அனைவருக்கும் தெரிய வரும்.
மனிதாபிமான அடிப்படையில்தான் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். எங்களது போராட்டம் தொடரும். நாங்கள்சிறையில் இருக்கிறோமோ அல்லது வெளியில் இருக்கிறோமோ என்ற கவலையே கிடையாது. எங்கிருந்தாலும்நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
நவம்பர் 30-ம் தேதி வரை காவலை நீட்டித்து தடா நீதிமன்ற நீதிபதி எம்.சின்னப்பாண்டி உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.