மூப்பனார், ராமதாசுக்கு ராஜ்குமார் நன்றி
சென்னை:
தனது விடுதலைக்கு உதவிய தமிழக கட்சித் தலைவர்கள் மூப்பனார், ராமதாஸ் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார் கன்னட நடிகர்ராஜ்குமார்.
வீரப்பன் பிடியில் இருந்த நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தூதுக்குழுவினர் 6 வது முறையாக காட்டிற்கு செல்வதில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது.தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை எதிர்த்து சட்டசபையில் தமாகா கிளப்பிய பிரச்சனையால் இந்தமுட்டுக்கட்டை உருவானது.
இதையடுத்து, நெடுமாறன் தூது செல்ல முடியாது என்று மறுத்து விட்டார். இந்நிலையில் ராஜ்குமார் மகன்கள் சென்னை ஓடோடி வந்து தமாகா தலைவர்மூப்பனார், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துப் பேசி, தந்தையை மீட்க உதவும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன் பின்னர் தமாகா தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. பாமகவோ ஒரு படி மேலே போய் ராஜ்குமாரை விட்டு விடும்படி வீரப்பனுக்கு கடிதம்எழுதியது.
இதையெல்லாம் நினைவு கூர்ந்து விடுதலையானதும் செலலூலார் போன் மூலம் முப்பனார், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்ராஜ்குமார்.
ராஜ்குமாரை விடுதலை செய்ததற்காக, வீரப்பனுக்கு நன்றி தெரிவித்தார் மூப்பனார். சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜ்குமார்விடுதலைக்காக வீரப்பனுக்கு நன்றி என்றார்.