ஊழியர்கள் ஸ்டிரைக்: வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன
டெல்லி:
இந்தியா முழுவதும் புதன்கிழமை வங்கி ஊழியர்கள், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் நடத்தியதால் வங்கிப் பணி முழுவதும் ஸ்தம்பித்தது.
10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாக அகில இந்திய வங்கி அலுவலர்கள் சம்மேளனம்தெரிவித்தது.
அகில இந்திய வங்கி அலுவலர் சம்மேளனத் தலைவர் டிஎன்.கோயல் நிருபர்களிடம் கூறுகையில், ஊழியர்கள்வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு,வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் முழு ஆதரவு இருந்தது.
வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.ஏற்கனவே மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் கடன்வாங்கியுள்ளனர். அவற்றை அவர்கள் இன்னும் அடைக்காத நிலையில் அவர்களிடமே வங்கிகளை ஒப்படைப்பதைகண்டிக்கிறோம்.
இவர்கள் வங்கிகளில் கடனாகப் பெற்று சுரண்டிய தொகையே ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் ஆகும். இந்தநிலையில், வங்கிகளைத் தனியார் மயமாக்குவது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
சென்னையிலும் பாதிப்பு:
சென்னையிலும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் யாரும்வேலைக்கு வரவில்லை. ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளன சென்னை பிரிவு தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் வங்கிஊழியர்கள், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவர்கள் இந்தியன்வங்கியிலிருந்து ஊர்வலமாகச் சென்று பாரிமுனை வழியாக தலைமைச் செயலகத்துக்குச் சென்றனர்.
வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வரும் 20 ம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாநிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றுஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், முதல்வர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications