பெங்களூர் வந்தார் ராஜ்குமார்
பெங்களூர்:
ஈரோட்டிலிருந்து ஹெலிகாப்டரில் பெங்களூர் வந்தடைந்தார் ராஜ்குமார்.
அவருக்கு ஜக்கூர் விமான நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக பெங்களூரிலிருந்து அனுப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் சிங்கம்பட்டிகிராமத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இறங்கின.
தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகரின் பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் மற்றும் அவரதுகுடும்பத்தினர் இங்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு அந்த ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர் ராஜ்குமாரும் பர்வதம்மாவும் ஒருஹெலிகாப்டரிலிலும் மற்றவர்கள் ஒரு ஹெலிகாப்டரிலும் ஏறி பெங்களூர் கிளம்பினர்.
12.00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்த ராஜ்குமாரை வரவேற்க விமான நிலையத்தில் பெரும் திரளானஎண்ணிக்கையில் அவரது ஆதரவாளர்கள் கூடினர். வெடிகளை வெடித்து அவரை வரவேற்றனர்.
அவரைச் சந்திப்பதற்காக ரசிகர்கள் இடையே பெரும் அடிதடியே நடந்தது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்கபோலீசார் தடியடி நடத்தினர்.
மிகவும் களைப்புடன் காணப்பட்ட ராஜ்குமார், அங்கிருந்து கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதானசெளதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் பொது மக்களையும் நிருபர்களையும் சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications