ஜெ. வழக்கில் தொழிலதிபருக்கு கோர்ட் வாரன்ட்
சென்னை:
ஜெயலலிதாவின் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக டைட்டன் வாட்ச் டீலருக்கு நீதிமன்றம் வாரண்ட்பிறப்பித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ 66 லட்சத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீது முதலாவது தனிநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை கதீட்ரல் சாலையில் இருக்கும் டைட்டன் வாட்ச் மொத்தவிற்பனையாளரான சஞ்சய் ஜெயின் என்பவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஜெயலலிதாவின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால் சஞ்சய் ஜெயினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. ஆனால் அவர்புதன் கிழயைன்று கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications