கேரள சுற்றுலா அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள கேரள மாநில சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலகத்தில் திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழக தொண்டர்கள்வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் அங்கு வேலை செய்யும் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் பணியைப் பார்வையிடச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்களை, கேரளவனத்துறை ஊழியர்கள் தாக்கினர்.
இதைக் கண்டித்து, திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், சென்னையிலுள்ள கேரள சுற்றுலாத் துறை தகவல் அலுவலகத்தைமுற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர்.
கேரள அதிகாரிகளை கேரளாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு அவர்கள் கோஷமிட்டனர். இந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த, கம்ப்யூட்டர், பேக்ஸ்இயந்திரம், மரச்சாமான்கள், ஜன்னல் கதவுகள் சேதமடைந்தன.
சம்பவ இடத்திற்கு உயர் போலீஸார் அதிகாரிகள் விரைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications