நஷ்டத்தில் அரசு கூட்டுறவு நூற்பாலைகள் .. அமைச்சர்
ஈரோடு:
அரசு சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 14 கூட்டுறவு நூற்பாலைகளில் 2 மட்டுமே லாபத்தில் இயங்கி வருவதாகமாநில கைத்தரித் துறை அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி கூறினார்.
ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமிகூறியதாவது:
தமிழகத்தில் இயங்கும் 14 கூட்டுறவு நூற்பாலைகளில் இரண்டு மட்டுமே லாபத்தில் இயங்கி வருகின்றன. அரசின்பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மற்ற கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்க வழி வகுக்கப்படும். லாபத்தில்இயங்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னிமலையில் செயல்பட்டு வரும் சென்கோப்டெக்ஸ், ஒரு கோடியே 85 லட்ச ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.அதே போல் சென்டெக்ஸ் ஒரு கோடியே 60 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
இலவச வேஷ்டி சேலைகளின் தரம், அளவு ஆகியவற்றை நிர்ணயிக்க குறியீட்டு எண் வழங்கப்படவுள்ளது.கைத்தறிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் போக, மீதமுள்ளவை தான் விசைத் தறிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
வரும் தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச வேஷ்டி சேலைகள் ரூ. 1.54 கோடி செலவில்தயார் செய்யப்பட்டுள்ளன. இலவச வேஷ்டி சேலை தயாரிக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டது.
கைத்தறிகள் மூலம் 48 லட்சத்து 10 ஆயிரம் வேஷ்டிகளும், 21 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளும்தயாரிக்கப்பட்டுள்ளன. 98 ஆயிரம் சேலைகள், 67 லட்சத்து 42 ஆயிரம் வேஷ்டிகள் விசைத் தறிகள் மூலம்தயாரிக்கப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் மாதம், 31 ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு வேஷ்டி சேலைகள் வழங்கப்படும் என்றார் அவர்.