தமிழர்கள் நம் சகோதரர்கள் .. ராஜ்குமார் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழர்களும் நம் சகோதரர்களே. கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று வீரப்பன் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்கூறியுள்ளார்.

பெங்களூர் விதான செளதாவில் முதல்வர் முன்னிலையில் பேட்டி அளித்த பின்ராஜ்குமார் நிருபர்களிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது, நான் நிறைய பேசவேண்டும் என்று இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. நான் ஒன்றும் பெரிய புத்திசாலிஇல்லை அல்லவா?

தமிழ் நாட்டில் கன்னட மக்கள் வசிக்கிறார்கள். அதேபோல, கர்நாடகத்தில் தமிழர்கள்வசிக்கிறார்கள். இருவரும் சகோதரர்களே. நானும் தமிழர்களின் சகோதரனே.

மொழியால் நாம் வேறுபடக் கூடாது. வீரப்பன் என்னைக் கடத்திச் சென்ற சம்பவம் இருமொழி மக்களிடையே புதிய பந்தத்தை ஏற்படுத்தி விட்டது. இரு மொழி மக்களும்வேற்றுமை பார்க்காமல் பழக வேண்டும்.

காட்டிலிருந்து ஈரோட்டிற்கு வந்தபோது தமிழ் மக்கள் என்னை உற்சாகத்தோடுவரவேற்றனர். இங்கு பெங்களூரில் கன்னட மக்கள் எப்படி வரவேற்றார்களோ அதேஉற்சாகத்துடன் வரவேற்றனர்.

தமிழர்களோடு, சேர்ந்து கன்னடர்கள் வாழ வேண்டும். இருவரும் பெண் கொடுத்து,பெண் எடுக்கும் அளவுக்கு உறவு வலுப்பட வேண்டும் என்று உருக்கமாக பேசினார்ராஜ்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+