அதிகாரிகள் குழப்பம் ..விமானத்தை ஓட்ட மறுத்த விமானிகள்
சென்னை:
விமான நிலைய அதிகாரிகளின் குளறுபடிகள் காரணமாக சென்னையில் இருந்து மும்பை செல்லும் இந்தியன்ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்ட விமானி மறுத்து விட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக் கிழமைமாலை 6.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் 200 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் "சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த விமானம் புறப்படுவதற்குதாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. சரியான காரணம் புரியாமல் பயணிகள் விமானத்தை விட்டு கீழேஇறங்கினர். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் இந்த விமானம் இரவு 9.45 மணிக்கு புறப்படும் என்றனர்.
வழக்கமாக விமானம் புறப்படுவதற்கு முன்னர் துணை கேப்டனிடம் ஒரு பெட்டி கொடுக்கப்படும். அதில்லைசென்ஸ், விமானத்தை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள், செல்ல வேண்டிய இடம், அதற்கான தூரம், விமானபாதை பற்றிய வரைபடம் போன்ற முக்கியமான ஆவணங்கள் இருக்கும்.
மும்பை விமானத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய அந்த கறுப்பு பெட்டியை தவறுதலாக டெல்லி செல்லும்விமானத்திடம் கொடுத்து அனுப்பி விட்டனர் அதிகாரிகள். இதனால் வந்த குழப்பம் காரணமாக மும்பைவிமானத்தை இயக்க விமானிகள் மறுத்து விட்டனர்.
பின்னர் வேறு ஒரு விமானியை சரிக்கட்டி அவர் தயவில் அந்த விமானம் இரவு 10 மணியளவில் மும்பைசென்றது.












Click it and Unblock the Notifications